Friday, 18 January 2013


அவதாரம்

சிங்கப்பூர் சட்டை போட்டு
சீனத்து பேண்ட்போட்டு
பந்தபாசம் விட்டுப்புட்டு
பணத்துக்காக கஷ்டப்பட்டு

கடன்கள் நிறைந்திருக்க
வெளிநாடு வந்தமுங்க
நாங்க வெளிநாடு வந்தமுங்க
மானம் எல்லாம் விட்டுப்புட்டு
மாடுபோல கஷ்டப்பட்டு
தரக்குறைவான பேச்சுக்கேட்டும்
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
முகத்தில் கொஞ்சம் ஒளியிருந்தும்
மனது நிறைய வலியிருந்தும்
வீட்டையே நினைச்சுக்கிட்டு
கண்மூடி உறங்கப்போனா
பதறிப்போய்
பாதி இரவினில் விழிக்கவேண்டி
கனவில் வருகிறது
கடன்களின் பிள்ளைகள்!
 
எல்லாமுமாய் எனக்கு

பிரம்மன் செய்த பிரமாண்டம் நீ
நொடியினில் படைக்கும் அவனுக்கே
உனைப் படைக்க
ஆண்டுகள் நூறு பிடித்திருக்கும்
பூமிக்கு உன்னை அனுப்பிவிட்டு
யோசித்திருப்பான்
அவசரப்படடு அனுப்பிவிட்டோமே என்று
உன் இதழின் வரிகளை

படித்துப் பார்க்க
இந்த ஜென்மம் போதாது
நீ பேசிய வார்த்தைகளை
கொட்டியும் பார்க்கிறேன்
கோர்த்தும் பார்த்துவிட்டேன்
அர்த்தங்கள் தான் எத்தனை எத்தனையோ
நீ திட்டும் வார்த்தையாவும்
எனக்கு குட்டிக் கவிதைகள்
வாரக்கணக்கில் சுமந்த
உன்தாய்மேல் தான் எத்தனை பாசம்
வருடக்கணக்கில் சுமக்கவிருக்கும்
என்மேல் மட்டும்
ஏன் இத்தனை கோபம்
தினமும் நான் பிறக்கிறேன்
எல்லாம் உன்னாலே!
உருக்கமான என் பகலிலும்
நெருக்கமான என் இரவிலும்
விடியலாக தோன்றுவது
உன் முகம் மட்டுமே
ஆசைகள் கோடி
அத்தனையும் உன் கால்நகமளவே
எவ்வளவோ எழுதியாச்சு
அனைத்தும் உன் பெயர்தான்
பேச்சினூடே மனம் உச்சரிப்பது
உன்பெயர்தான்





இவள் தான் பார்த்த உடன் பற் றியது
மூளையின் முனங்கள்
கண் மூடிய தருணம் கூட
கண் விழித் துக் கொண்டிருக் கும்
அவள் நினைவிகள்
அங்கங்கள் எல்லாம் அழகு தான்
 உண் ஆள்காட் டி விரல் கூட அழகு தான்
 நீ எதையாவது சுட் டிக் காட்டயிலலே
 அதை விட அழகு நீ என்னை  சுட் டிக் காட் டயிலே
உண் மௌனம் போல் அழகில்லை
இந்த உலகில் எனக்கு
எப்போதும் அடிமை நான்
எனக்குள்  உணக்காக

Monday, 14 January 2013


உண் பாதச் சூட்டில் பதிந்து விட்டால்
நான் செய்த பாவம் எல்லாம் போய்விடும்
பாதம் இல்லை இவை என்  பாவம் போக்க வந்த  சாபம்
இது மோகம் இல்லை மோட்சம்
கால் விரலில் கூட என்ன கலப்படமா பஞ்சு
நெஞ்சில் கலக்கிரது நஞ்சு

Wednesday, 28 November 2012

தூக்கம் தொலைத்த என் துக்கம்
என் தாயின் மடி இல்லாமல்
ஏதோ நாட்டின் பிடியில்  இருக்கும் வரை
எப்பொதும் ஏழைதான் 
எவ்வளவு பணம் இருந்தாலும்
தாயின் மடியை தலையணை ஆக்கிய நாட்கள்
பட்டாம்பூச்சி பிடித்துதிரிந்த நாட்கள்
அன்பான உரவுகள் அனைத்திர்க்கும்
விடை கொடுத்து விட்டுவிதியை நினைத்து
விமானம் ஏருகிரேன் என்றாவது
ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையுடன்
ஒவ்வொரு முரையும் பொருளாதார​ சீர்திருத்தத்திர்காக
அண்ணனின் கை பிடித்துதிரிந்த  நாட்க்கள்
அக்காவிடம்  செல்ல சண்டை நாட்க்கள்
ஆழமர விழுதுகளை ஊஞ்சல் ஆக்கிய ஞயிரு விடுமுரை
(அ) சொல்லித்தந்த பள்ளி ஆசிரியை
ஆருதலுக்காக அசை போடுகிரேன்
அம்மா அப்பா இருந்தும் அநாதை தான் நான்
எனது நாட்கள் என்று எதுவும் இல்லை இங்கு   
அனைத்து  சொந்தங்களையும் அ(னை)த்துக்கொள்கிரேன்
ஒரு தொலைபேசி துண்டிப்பில்



Sunday, 25 November 2012


 வத்தக்குழம்பு வாசம்


புலிக் கண்மாயிலே
புளியமரத்தின் ஓரத்திலே
ஓலைக் குடிசையிலே
வற்றக்குழம்பு  வாசம் வீசயிலே
சானம் இட்ட தரையினிலே
தாயின் மடியினிலே
தலைசாய்ந்து படுக்கையிலே
உறங்கிய நேரமும் தெரியவில்லை
சுகமாக எழுந்தேன் காலையிலே
சிங்கை சென்றேன்  அன்று மாலையிலே
பஞ்சு மெத்தையிலே
படுத்து புரல்கையிலே
தூக்கம் வரவேயில்லை
நாகரீக உணவினிலே
நாக்கு செத்துப் போனதடி தாயே!
அன்று
நீ அன்பாய் பரிமாறிய வற்றக்குழம்பு

வாசம் இன்னும் வீசுதடி!
 எனது தேவையற்ற அடயாலங்கலை தொலைக்க முயர்ச்சிக்கிரேன் சிலவை மறைகின்றன் சிலவை மரைக்கின்றன என் நிஜதையும் சேர்த்து