Friday 18 January 2013

 
எல்லாமுமாய் எனக்கு

பிரம்மன் செய்த பிரமாண்டம் நீ
நொடியினில் படைக்கும் அவனுக்கே
உனைப் படைக்க
ஆண்டுகள் நூறு பிடித்திருக்கும்
பூமிக்கு உன்னை அனுப்பிவிட்டு
யோசித்திருப்பான்
அவசரப்படடு அனுப்பிவிட்டோமே என்று
உன் இதழின் வரிகளை

படித்துப் பார்க்க
இந்த ஜென்மம் போதாது
நீ பேசிய வார்த்தைகளை
கொட்டியும் பார்க்கிறேன்
கோர்த்தும் பார்த்துவிட்டேன்
அர்த்தங்கள் தான் எத்தனை எத்தனையோ
நீ திட்டும் வார்த்தையாவும்
எனக்கு குட்டிக் கவிதைகள்
வாரக்கணக்கில் சுமந்த
உன்தாய்மேல் தான் எத்தனை பாசம்
வருடக்கணக்கில் சுமக்கவிருக்கும்
என்மேல் மட்டும்
ஏன் இத்தனை கோபம்
தினமும் நான் பிறக்கிறேன்
எல்லாம் உன்னாலே!
உருக்கமான என் பகலிலும்
நெருக்கமான என் இரவிலும்
விடியலாக தோன்றுவது
உன் முகம் மட்டுமே
ஆசைகள் கோடி
அத்தனையும் உன் கால்நகமளவே
எவ்வளவோ எழுதியாச்சு
அனைத்தும் உன் பெயர்தான்
பேச்சினூடே மனம் உச்சரிப்பது
உன்பெயர்தான்

No comments:

Post a Comment