எல்லாமுமாய் எனக்கு
பிரம்மன் செய்த பிரமாண்டம் நீ
நொடியினில் படைக்கும் அவனுக்கே
உனைப் படைக்க
ஆண்டுகள் நூறு பிடித்திருக்கும்
பூமிக்கு உன்னை அனுப்பிவிட்டு
யோசித்திருப்பான்
அவசரப்படடு அனுப்பிவிட்டோமே என்று
உன் இதழின் வரிகளை
படித்துப் பார்க்க
இந்த ஜென்மம் போதாது
நீ பேசிய வார்த்தைகளை
கொட்டியும் பார்க்கிறேன்
கோர்த்தும் பார்த்துவிட்டேன்
அர்த்தங்கள் தான் எத்தனை எத்தனையோ
நீ திட்டும் வார்த்தையாவும்
எனக்கு குட்டிக் கவிதைகள்
வாரக்கணக்கில் சுமந்த
உன்தாய்மேல் தான் எத்தனை பாசம்
வருடக்கணக்கில் சுமக்கவிருக்கும்
என்மேல் மட்டும்
ஏன் இத்தனை கோபம்
தினமும் நான் பிறக்கிறேன்
எல்லாம் உன்னாலே!
உருக்கமான என் பகலிலும்
நெருக்கமான என் இரவிலும்
விடியலாக தோன்றுவது
உன் முகம் மட்டுமே
ஆசைகள் கோடி
அத்தனையும் உன் கால்நகமளவே
எவ்வளவோ எழுதியாச்சு
அனைத்தும் உன் பெயர்தான்
பேச்சினூடே மனம் உச்சரிப்பது
உன்பெயர்தான்
No comments:
Post a Comment