வத்தக்குழம்பு வாசம்
புலிக் கண்மாயிலே
புளியமரத்தின் ஓரத்திலே
ஓலைக் குடிசையிலே
வற்றக்குழம்பு வாசம் வீசயிலே
சானம் இட்ட தரையினிலே
தாயின் மடியினிலே
தலைசாய்ந்து படுக்கையிலே
உறங்கிய நேரமும் தெரியவில்லை
சுகமாக எழுந்தேன் காலையிலே
சிங்கை சென்றேன் அன்று மாலையிலே
பஞ்சு மெத்தையிலே
படுத்து புரல்கையிலே
தூக்கம் வரவேயில்லை
நாகரீக உணவினிலே
நாக்கு செத்துப் போனதடி தாயே!
அன்று
நீ அன்பாய் பரிமாறிய வற்றக்குழம்பு
No comments:
Post a Comment