Friday 18 January 2013


அவதாரம்

சிங்கப்பூர் சட்டை போட்டு
சீனத்து பேண்ட்போட்டு
பந்தபாசம் விட்டுப்புட்டு
பணத்துக்காக கஷ்டப்பட்டு

கடன்கள் நிறைந்திருக்க
வெளிநாடு வந்தமுங்க
நாங்க வெளிநாடு வந்தமுங்க
மானம் எல்லாம் விட்டுப்புட்டு
மாடுபோல கஷ்டப்பட்டு
தரக்குறைவான பேச்சுக்கேட்டும்
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
முகத்தில் கொஞ்சம் ஒளியிருந்தும்
மனது நிறைய வலியிருந்தும்
வீட்டையே நினைச்சுக்கிட்டு
கண்மூடி உறங்கப்போனா
பதறிப்போய்
பாதி இரவினில் விழிக்கவேண்டி
கனவில் வருகிறது
கடன்களின் பிள்ளைகள்!

1 comment: