Wednesday 28 November 2012

தூக்கம் தொலைத்த என் துக்கம்
என் தாயின் மடி இல்லாமல்
ஏதோ நாட்டின் பிடியில்  இருக்கும் வரை
எப்பொதும் ஏழைதான் 
எவ்வளவு பணம் இருந்தாலும்
தாயின் மடியை தலையணை ஆக்கிய நாட்கள்
பட்டாம்பூச்சி பிடித்துதிரிந்த நாட்கள்
அன்பான உரவுகள் அனைத்திர்க்கும்
விடை கொடுத்து விட்டுவிதியை நினைத்து
விமானம் ஏருகிரேன் என்றாவது
ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையுடன்
ஒவ்வொரு முரையும் பொருளாதார​ சீர்திருத்தத்திர்காக
அண்ணனின் கை பிடித்துதிரிந்த  நாட்க்கள்
அக்காவிடம்  செல்ல சண்டை நாட்க்கள்
ஆழமர விழுதுகளை ஊஞ்சல் ஆக்கிய ஞயிரு விடுமுரை
(அ) சொல்லித்தந்த பள்ளி ஆசிரியை
ஆருதலுக்காக அசை போடுகிரேன்
அம்மா அப்பா இருந்தும் அநாதை தான் நான்
எனது நாட்கள் என்று எதுவும் இல்லை இங்கு   
அனைத்து  சொந்தங்களையும் அ(னை)த்துக்கொள்கிரேன்
ஒரு தொலைபேசி துண்டிப்பில்



Sunday 25 November 2012


 வத்தக்குழம்பு வாசம்


புலிக் கண்மாயிலே
புளியமரத்தின் ஓரத்திலே
ஓலைக் குடிசையிலே
வற்றக்குழம்பு  வாசம் வீசயிலே
சானம் இட்ட தரையினிலே
தாயின் மடியினிலே
தலைசாய்ந்து படுக்கையிலே
உறங்கிய நேரமும் தெரியவில்லை
சுகமாக எழுந்தேன் காலையிலே
சிங்கை சென்றேன்  அன்று மாலையிலே
பஞ்சு மெத்தையிலே
படுத்து புரல்கையிலே
தூக்கம் வரவேயில்லை
நாகரீக உணவினிலே
நாக்கு செத்துப் போனதடி தாயே!
அன்று
நீ அன்பாய் பரிமாறிய வற்றக்குழம்பு

வாசம் இன்னும் வீசுதடி!
 எனது தேவையற்ற அடயாலங்கலை தொலைக்க முயர்ச்சிக்கிரேன் சிலவை மறைகின்றன் சிலவை மரைக்கின்றன என் நிஜதையும் சேர்த்து