சுவாசத்திலே!
என்னைப்
பத்து மாதம் சுமந்த
தாயின்
பாசம் இன்னமும் என் கண்களிலே
என் தாயை பெற்றபின்னும்
என் தாயை சுமந்துகொண்டிருக்கும்
என் தாய் நாட்டை எப்படி
மறப்பது
நான் உயிருடன் ஊர் திரும்புவது
உண்மையின்
கையிலே!
என்னுள்ளே
சிறைபட்ட
என் தேசத்தின் காற்று
இன்னமும்
பத்திரமாய் என்னுள்ளே
எனும் நம்பிக்கையில் கடந்து செல்கிறேன்
இங்கிருந்தே
ஒருநாள்
இவ்வுலகிலிருந்து
விடுபடுவேன் எனில்
என்னுள்ளே
பத்திரப்படுதியுள்ள
என் தேசத்தின் காற்றை சுவாசித்தே இறப்பேன்.
No comments:
Post a Comment