நீ ஒன்றே
வயிற்றில்
நான் எட்டி உதைத்தபோதுதான்
இவளின்
வாலிபம் நொறுங்கிப்போனது
நான் பிறந்தேன்
இவளின்
சந்தோசம் இறந்து போனது
இவளுக்காக
இவள் கண்விழித்த நாட்களை விட
எனக்காக
விழித்திருந்த நாட்களே அதிகம்
எனக்காக
ஆலோலா பாடினாள்
என் மேல் தூசி படிந்தாலும்
அதன் துயரத்தை இவள் அனுபவிப்பாள்
இவள் அல்லவா என்னை பெற்றதாக
நினைத்தேன்?
என்னை பெத்த இராஜா என்கிறாளே
நான் எப்படி?
என்னின்
தேவைகளை
முகம் பார்த்து படித்துக்கொள்வாள்
இவ்வுலகில்
எனக்காகவே வாழும் ஆத்மா
அன்பான
உறவுகள் ஆயிரம் தேவையில்லை
உயிர்ப்பின்
ரூபமே உண்மையே
அம்மா
நீ ஒன்றே போதுமே!.
No comments:
Post a Comment